×

நீலாங்கரையில் பாலியல் தொழில்; பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது: இளம்பெண்கள் மீட்பு


சென்னை: நீலாங்கரையில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பெண் புரோக்கர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். நீலாங்கரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு, சந்தேகத்திற்கு இடமான வகையில் இரவு நேரங்களில் அடிக்கடி வாலிபர்கள் வந்து செல்வதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு, அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. அதன்படி விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் நீலாங்கரை அண்ணாநகர் பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்கு அதிகளவில் ஆண்கள் வந்து சென்றது தெரியவந்தது.

உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்திய போது, இளம்பெண் ஒருவரை வைத்து ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல பாலியல் பெண் புரோக்கர் ஸ்டெல்லா (40), பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் ஸ்டெல்லாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்து, இளம் பெண் ஒருவரை மீட்டனர். அதேபோல், விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் கோயம்பேடு அவ்வை குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தி வந்த, தேனி மாவட்டம் தேவாதாணப்பட்டி பகுதியை சேர்ந்த தீலிபன் தென்னரசு (27) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து இளம்பெண் ஒருவர் மீட்டக்கப்பட்டார். பின்னர் பெண் பாலியல் புரோக்கர் உட்பட 2 பேரை விபசார தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post நீலாங்கரையில் பாலியல் தொழில்; பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது: இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Neelangarai ,CHENNAI ,Annanagar ,Dinakaran ,
× RELATED வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த...